அரிசியை இறக்குமதி செய்ய நேரிடலாம்
அரிசியின் விலையை தொடர்ந்தும் கட்டுப்படுத்த முடியாமல் போனால் அரிசியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் விலையை கட்டுப்படுத்த முடியாது போனால் அரிசியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டி ஏற்படும்.
அதிகரிக்கப்படும் விலை
விலைக் கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும்போது அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டால் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அரிசிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி உற்பத்தியாளர்களும், வர்த்தகர்களும் விற்பனை செய்கின்றனர்.
இதை நாட்டு மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது. எதிர்காலத்தில் மாவட்டந்தோறும் சென்று நிச்சயமாக சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வோம்.
தொடர்ந்தும் விலையை கட்டுப்படுத்த முடியாது போனால் அரிசியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam