வவுனியாவில் அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை! எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் கைது
வவுனியா நகர மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையிலுள்ள வவுனியா தெற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் மீள் நிரப்பு நிலையத்தில் பணியாற்றும் எரிபொருள் நிரப்பும் ஊழியர் ஒருவர் அங்கு கொல்கலனில் எரிபொருளை சேமித்து அருகேயுள்ள வியாபார நிலையத்தில் வைத்து ஒரு லீற்றர் பெட்ரோல் 1000 ரூபாய் படி விற்பனை செய்வதாக இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் கைது
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து செயற்பட்ட பொலிஸார் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 16 லீற்றர் பெட்ரோல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன்,விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.