பொலிஸ் நிலையத்தில் நுழைந்த சீமானால் பரபரக்கும் வளசரவாக்கம்
நடிகை விஜயலஷ்மி அளித்த பாலியல் முறைப்பாடு தொடர்பான விசாரணைக்காக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தம்மை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றினார் என்று நடிகை விஜயலட்சுமி பாலியல் முறைபாடு ஒன்றை அளித்திருந்தார்.
கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த முறைப்பாட்டை இரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேலும், 12 வாரத்திற்குள் விசாரணையை முடித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவிட்டதையடுத்து, விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்திய பொலிஸார், சீமானையும் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அறிக்கை அனுப்பியுள்ளனர்.
பின்னர் அவரது வீட்டில் ஒட்டப்பட்ட விசாரணை அறிக்கை கிழிக்கப்பட, இந்த விவாகரத்தில் சீமானின் பாதுகாவலர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.