விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருடனான புகைப்படம்! தொடர் சிக்கலில் சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருடன் எடுத்து கொண்ட புகைப்படம் தொடர்பில் பெரும் சர்ச்சைகள் வெளியாகியுள்ளது.
''எடிட்'' செய்யப்பட்ட புகைப்படமே அவரால் வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அரசியலுக்காகவே சீமான், பெரியார் தொடர்பில் பேசிவருகின்றார் எனவும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனுடனான புகைப்படம் தொடர்பிலும், இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே(Rangaraj Pandey) சில விளக்கங்களை வழங்கியுள்ளார்.
ஐபிசி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட அவர்,
“விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனுடனான சீமானின் சந்திப்பு மற்றும் வெளியான புகைப்படங்கள் அனைத்தும் பொய்யென தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த விடயங்கள் அனைத்தும் சீமான் மீது அவதூறு பரப்புவதற்காகவே கூறப்படுகின்றன.
எனினும், ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்தே சீமானின் அரசியல் வாழ்க்கை ஆரம்பித்தது.
அதோபோல ஈழத்தமிழர்களுக்காக வைகோவும், சீமானும் குரல் கொடுத்ததை போன்று வேறு யாரும் குரல் கொடுக்கவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
