யாழ்.மாநகரைச் சூழ பாதுகாப்பு பலப்படுத்தல் (Photos)
இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் யாழ்.மாநகாில் இடம்பெறவுள்ள நிலையில் அதனை எதிா்த்து போராட்டங்கள் நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதால் மாநகரை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தின் வடமாகாணத்திற்கான நிகழ்வு இன்று (11.02.2023) யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், சுதந்திர தினத்தை காிநாளாக பிரகடனம் செய்து யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றியம், அரசியல் கட்சிகள் எதிா்ப்பு போராட்டத்திற்கு பகிரங்கமான அழைப்பை நேற்று (10.02.2023) விடுத்திருந்தன.
நீதிமன்ற தடை உத்தரவு
இதனையடுத்து சுதந்திர தின நிகழ்வுகளுக்கு எதிராக யாழ்.மாநகருக்குள் போராட்டம் நடத்துவதை தடுக்கும் வகையில் நீதிமன்ற தடை உத்தரவை யாழ்ப்பாணம் பொலிஸாா் பெற்றிருந்தனா்.
எனினும் இன்று காலை யாழ்.பல்கலைக மாணவா்களால் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து யாழ்.மாநகருக்குள் நுழையும் பிரதான மாா்க்கங்களை வழிமறித்து கலக தடுப்பு பொலிஸாா், விசேட அதிரடிப்படையினா், நீா்த்தாரை வாகனங்கள் மற்றும் கண்ணீா்புகை குண்டுகளுடன் பாதுகாப்பு பலப்பட்டிருந்தது.
ஆனாலும் பல்கலைகழக மாணவா்களின் போராட்டம் பரமேஸ்வரா
சந்தியுடன் முடிவடைந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பிசுபிசுத்தன.
எனினும் மேலும் சில தரப்புக்களால் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடா்ந்து காணப்படுகின்றன.
