யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையகம் அகற்றல்! பாதுகாப்பு தரப்பில் ஏற்பட்டுள்ள அச்சம்
யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகம் (SFHQ-J) அகற்றப்படவுள்ளதாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாகி கல்லகே தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமூக வலைத்தளத்தில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகம் பலாலியில் இருந்து பிரதான நிலப்பகுதிக்கு மாற்றப்படுவது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.
அவ்வாறு மாற்றப்படுவதற்கு பேச்சுவார்த்தை நடப்பதென்றால் அது மிகவும் அவதானமாக ஆராயப்பட வேண்டியதாகும் என தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளரின் கருத்து
ஆனால் குறித்த சமூக வலைத்தள பதிவுக்கு பாதுகாப்புச் செயலாளர், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துயகொந்தா (Sampath Thuyakontha) பதிலளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் சமூகத்திற்குள் தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதுபோன்ற புனையப்பட்ட மற்றும் உணர்திறன் மிக்க கூற்றுக்களைப் பரப்பும் நபர்கள் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்குகிறார்கள் எனவும் இது நாட்டிற்கு ஆரோக்கியமற்ற சூழ்நிலையாகும்.
அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய பிரசாரங்களை வன்மையாகக் கண்டிப்பதாக என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
you may like this
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri