அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக மீண்டும் ஹமீட்: கட்சி இணக்கம்(Photo)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக வை.எல்.எஸ். ஹமீடை மீண்டும் நியமிக்க அக்கட்சி இன்று (21) கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இணக்கம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நியமன விவகாரத்தில் அக்கட்சியின் ஸ்தாபக செயலாளர் நாயகமான வை.எல்.எஸ் ஹமீட் மற்றும் அக்கட்சியின் தலைவரான றிசாத் பதியுதீன் ஆகியோருக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளது.
முரண்பாடு

இதனையடுத்து, செயலாளர் பதவியிலிருந்து வை.எல்.எஸ் ஹமீட், கட்சித் தலைவர் றிசாத் பதியுதீனால் நீக்கப்பட்டுள்ளார்.
இந்த நீக்கத்திற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வை.எல்.எஸ் ஹமீட், மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தார். நீதிமன்றத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை அடுத்து கடந்த ஏழு வருடங்களாக இடம்பெற்ற குறித்த மனு மீதான விசாரணைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மனு

செயலாளர் நாயகம் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வை.எல்.எஸ் ஹமீடினை அடுத்த ஆறு மாதங்களுக்குள் நடைபெறவுள்ள கட்சியின் போராளார் மாநாட்டில் மீண்டும் கட்சியின் செயலாளர் நாயகமாக நியமிக்கப்படுவார் என்ற உறுதிமொழி அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த மனுவினை வை.எல்.எஸ் ஹமீட், மீள பெற்றுக்கொண்டுள்ளார்.

இன்றைய விசாரணையின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாத்
பதியுதீன், தவிசாளர் எம்.எஸ்.அமீர் அலி, செயலாளர் நாயகம் எம்.சுபைர்தீன்,
முன்னாள் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் மற்றும் சட்ட ஆலோசகர் றுஸ்தி ஹபீப்
ஆகியோர் மன்றில் சமூகமளித்துள்ளனர்.
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri