செந்தில் தொண்டமான் தலைமையில் கிழக்கு மாகாண பாதுகாப்பு சபைக் கூட்டம்
கிழக்கு மாகாண பாதுகாப்புச் சபைக் கூட்டம், ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் நேற்று(19.07.2023) இடம்பெற்றுள்ளது.
எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்
இக்கூட்டத்தில், சட்டம் ஒழுங்கு, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, சட்டவிரோத போதைப்பொருள் விநியோகம், சட்டவிரோத கடற்றொழில், சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடு, மனித கடத்தல், மான், பூங்காக்கள் மீதான கண்காணிப்பு, கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதன் போதுபிரதிப் பொலிஸ் மா அதிபர், கிழக்கு மாகாண இராணுவத் தளபதி, கிழக்கு மாகாணத்தின் கடற்படை ரியர் அட்மிரல், கிழக்கு மாகாணத்தின் விமானப்படை தளபதி ஆகியோருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |