இலங்கையை அதிர வைக்கும் படுகொலைகளின் பின்னால் மறைந்துள்ள அரசியல் சதி

CID - Sri Lanka Police Sri Lanka Police Easter Attack Sri Lanka Rajapaksa Family Crime
By Vethu Apr 23, 2025 05:30 AM GMT
Report

அண்மைக்காலமாக தென்னிலங்கையில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பலர் கொல்லப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு இடையிலான பழிவாங்கல் நடவடிக்கையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் மறுபுறத்தில் அரசியல் ரீதியான படுகொலைகளும் அரங்கேற்றப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

சமகால அநுர அரசாங்கம் கடந்த கால ஆட்சியில் ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிள்ளையானின் மறைக்கப்பட்ட கொலைகள் உட்பட பல குற்றங்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்

பிள்ளையானின் மறைக்கப்பட்ட கொலைகள் உட்பட பல குற்றங்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்

ராஜபக்ச குடும்பம் 

பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையை காப்பாற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை அதிர வைக்கும் படுகொலைகளின் பின்னால் மறைந்துள்ள அரசியல் சதி | Secret Behind Mystery Murders In Sri Lanka     

இந்நிலையில் கடந்த காலங்களில் பாரிய மோசடியில் ஈடுபட்ட ராஜபக்ச குடும்பத்திற்கு இது பாரியதொரு அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான பின்னணியில் ராஜபக்சர்களுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டு பல்வேறு குற்றச்செயல்களை செய்த நபர்களை கொலை செய்யும் படலம் மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதற்கமைவாக ராஜபக்சர்களுக்கு நெருக்கமானவரும், பல ரகசியங்களை அறிந்து வைத்திருந்தவருமான அருண விதானகமகே என்பவர் கடந்த பெப்ரவரி மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வெளியாகும்: நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வெளியாகும்: நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி

சுட்டுக்கொலை 

அவருடன் இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் மிகவும் நெருக்கமான அருண விதானகமகே, பல்வேறு கொலைகளுடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இலங்கையை அதிர வைக்கும் படுகொலைகளின் பின்னால் மறைந்துள்ள அரசியல் சதி | Secret Behind Mystery Murders In Sri Lanka

இந்நிலையில் நேற்றையதினம் இரவு ராஜபக்சர்களுடன் மிகவும் நெருக்கமானவரும், இனவாத சிந்தனையும் கொண்ட டான் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மீதொட்டுமுல்ல லக்சந்தசெவன அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த வேளையில், டான் பிரியசாத் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருந்தது.

அநுர அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தீவிரமாக செயற்பட்டு வருகிறது. அதன் பிரதான சூத்திரதாரிகள் அம்பலப்படுத்தப்படுவார்கள், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக காலிமுகத்திடலில் நடத்தப்பட்ட மக்கள் போராட்டமான அரகல மீதான வன்முறை தாக்குதல் விசாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

போப் பிரான்சிஸின் மரணத்தை தொடர்ந்து சீல் வைக்கப்படும் அவரது அறை..!

போப் பிரான்சிஸின் மரணத்தை தொடர்ந்து சீல் வைக்கப்படும் அவரது அறை..!

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் 

இந்த தாக்குதலை ராஜபக்சர்களின் உத்தரவுக்கு அமைய டான் பிரியசாத் முன்னெடுத்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் பல காணொளி ஆதாரங்களும் உள்ளன.

இவ்வாறான நிலையில் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால், அது ராஜபக்சர்களுக்கு வாழ்நாள் ஆபத்தாக மாறும், கூண்டோடு சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

இலங்கையை அதிர வைக்கும் படுகொலைகளின் பின்னால் மறைந்துள்ள அரசியல் சதி | Secret Behind Mystery Murders In Sri Lanka

இவ்வாறான பின்னணியில் டான் பிரியசாத் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலைக்கும் ராஜபக்சர்களின் அச்சத்திற்கும் இடையில் தொடர்பிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.

தமக்கு எதிரான சாட்சியங்களை திரைமறைவில் ராஜபக்சர்கள் அழித்து வருவதாகவே அரசியல் மட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 

அதேவேளை, தென்னிலங்கையில் தமிழர்சார் நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சம்பவ இடங்களில் வன்முறையில் ஈடுபட்டமை, சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவான செயற்பாடுகள், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, போதைப்பொருள் கடத்தல், அதிகார துஷ்பிரயோகம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் டான் பிரியசாத் மீது உள்ளமை குறிப்பிடத்தக்கது. 


கடந்த கால ஆட்சியாளர்களை போல நடந்துகொள்ளும் அநுர: இராதாகிருஷ்ணன் எம்.பி சாடல்

கடந்த கால ஆட்சியாளர்களை போல நடந்துகொள்ளும் அநுர: இராதாகிருஷ்ணன் எம்.பி சாடல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Vethu அவரால் எழுதப்பட்டு, 23 April, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US