இரண்டு நெல் களஞ்சியசாலைகளிற்கு சீல் வைப்பு
வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் வவுனியா தாண்டிக்குளம் மற்றும் ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள இரண்டு தனியார் நெற்களஞ்சிய சாலைகளிற்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் தொற்று பரவலடைந்து வரும் நிலையில் உணவுப்பொருட்களின் விலையும் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் நாட்டிலுள்ள தனியார் நெற்களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும் அரசினால் அறிவிக்கப்பட்ட கால எல்லைக்குள் குறித்த தகவல்களை வழங்காத இரண்டு நெற்களஞ்சிய சாலைகளை வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்களால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த களஞ்சிய சாலைகளில் உள்ள நெல்லினை நெல் சந்தைப்படுத்தும் சபையால் நிர்ணய விலையினை செலுத்தி கொள்வனவு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam