பூமிக்கு அடியில் மறைந்துள்ள மிகப்பெரிய கடலை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
அமெரிக்கா(America) - இல்லினாய்ஸ், எவன்ஸ்டனில் உள்ள நார்த் வெஸ்டர்ன்(Northwestern) பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் மறைந்திருக்கும் ஒரு பரந்த நீர் பரப்பினை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நிலத்தடி நீர் ஆதாரம் பூமியில் உள்ள அனைத்து கடல்களையும் விட மூன்று மடங்கு பெரியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மிகப்பெரிய நீர்ப்பரப்பு
அத்துடன் பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நீர் பரப்பு, பூமியின் புவியியல் மற்றும் நீர் சுழற்சியை உணர புதிய வழிகளை இந்த ஆராய்ச்சி தொடக்கப்புள்ளி என்றும் பூமியின் நீரின் தோற்றத்தை ஆராயும் போது இது கண்டறியப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் ரிங்வுடைட்(Ringwoodite) எனப்படும் கனிமத்தில் மறைந்திருக்கும் கடல் ஒன்றையே ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதுடன் பூமியின் நீரின் தோற்றத்தை நாம் உணரும் விதத்தை சவாலுக்குட்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கு தலைமை வகித்த விஞ்ஞானி ஸ்டீவன் ஜேக்கப்சன் கூறுகையில்,
‛‛நாம் வாழும் பூமிக்கு தண்ணீர் பூமிக்கடியில் இருந்து வந்தது என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆராய்ச்சி அமைந்துள்ளதுடன் இதற்கான வலுவான ஆதாரத்தை இந்த ஆய்வு காட்டுகிறது.
பூமிக்கடியில் நிகழும் மாற்றங்களை அறிய நிலநடுக்கங்களை பற்றிய ஆய்வும் செய்யப்பட்டது.
அந்தவகையில் 2000 நிலநடுக்கங்களின்போது ஏற்பட்ட 500 நிலஅதிர்வுகளின் அலைகளை ஆராயப்பட்டன. அப்போது நிலநடுக்கம் பூமிக்கடியில் மையம் கொண்டுள்ள தூரத்தை பொறுத்து அதிர்வுகளின் அலைவேகம் என்பது மாறுபட்டது.
இந்த அலைவேக மாறுபாட்டை ஆய்வு செய்தபோது பூமிக்கடியில் ஈரமான பாறைகள் இருப்பதும், ஆழம் செல்ல செல்ல அதன் அலைவேக மாறுபாடு குறைந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுவே பூமியின் மேற்பரப்பில் உள்ள கடல் அளவை விட 3 மடங்கு பெரிய கடல் மறைந்துள்ளதை கண்டுபிடிக்க உதவியது” என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஆய்வு குறித்த விபரம் 2014 ஆம் ஆண்டில் “ Dehydration melting at the top of the lower mantle ”என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரையாக வெளியாகி இருந்தது.
அதில் ரிங்வுடைட்(Ringwoodite) எனப்படும் நீல நிற பாறைக்குள் பூமிக்கடியில் பிரமாண்ட கடல் மறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
