மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள் - ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, மறு அறிவித்தல் வரை, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலைகளை நடத்தவும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்தே கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் போது பாடசாலை மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களிலும் இன்று பிற்பகல் 3.00 மணி முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்கள் மற்றும் வான்களுக்கு எரிபொருள் வழங்குமாறு போக்குவரத்து அமைச்சருக்கு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
