மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள் - ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, மறு அறிவித்தல் வரை, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலைகளை நடத்தவும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்தே கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் போது பாடசாலை மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களிலும் இன்று பிற்பகல் 3.00 மணி முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்கள் மற்றும் வான்களுக்கு எரிபொருள் வழங்குமாறு போக்குவரத்து அமைச்சருக்கு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
2000ஆம் ஆண்டு முதல் இதுவரை அதிக வசூல் செய்த இந்திய படங்கள் என்னென்ன தெரியுமா? முழு பட்டியல் இதோ Cineulagam
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan