தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ள 05 தமிழ் பாடசாலைகள்
இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரே தடவையில் 05 தமிழ் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன.
இதற்கு மேலதிகமாக அல் அக்ஸா முஸ்லிம் பாடசாலையும் தரமுயரத்தப்படவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் உப தலைவர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.
இந்த செயற்திட்டத்தின் கீழ் கஹவத்தை கிருஷ்ணா தமிழ் மகா வித்தியாலயம், பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மகா வித்தியாலயம், இறக்குவானை சென் ஜோன்ஸ் தமிழ் மகா வித்தியாலயம், இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயம், நிவித்திகல தேல தமிழ் மகா வித்தியாலயம் ஆகியன தரமுயர்த்தப்படவுள்ளன.
மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், அப்போதைய கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிடம் முன்வைத்த கோரிக்கையின் பேரிலேயே இந்த பாடசாலைகள்
தரமுயர்த்தப்படுவதாக ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.