மீண்டும் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன..
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் அடுத்த வாரமும் முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் G.L.பீரிஸ் சற்று முன்னர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
மேலும், பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதியின் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தீவிரமடையும் கோவிட் தொற்றின் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் படிப்படியாக மூடப்பட்டு வந்த நிலையில் கடந்த 27ஆம் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நேற்று வரையில்(30) விடுமுறை வழங்கப்பட்டது.
அதன் பின்னர் பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் வார இறுதி நாட்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேய அடுத்தவாரமும் பாடசாலைகள் முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan