பாடசாலைகளை மீண்டும் ஒருமுறை மூடவேண்டாம் - கர்தினால் கோரிக்கை
மீண்டும் ஒருமுறை பாடசாலைகளை மூட வேண்டாம் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
கோவிட் காரணமாக பாடசாலை அமைப்பை மூடுவதால், மாணவர்களின் அறிவாற்றல் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பெற்றோரின் சரியான வழிகாட்டுதல் இல்லாத நிலையில் மாணவர்கள், இணையங்களில் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாடசாலைகளை முடிந்தவரை திறந்து வைக்குமாறு கர்தினால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.