யாழில் பாடசாலை மாணவி துன்புறுத்தல்! கைது செய்யப்பட்ட ஆசிரியைக்கு பிணை
யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலையொன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவரை பிணையில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாடசாலை மாணவி
குறித்த பாடசாலையில் கல்வி கற்று வரும் 7 வயது மாணவியை அடித்து துன்புறுத்தியமை தொடர்பிலேயே ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி கடந்த 10ஆம் திகதி அடித்துத் துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகிய மாணவிக்கு உளநல மருத்துவ வல்லுநரினால் உளநல சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
7 வயது மாணவியை அடித்து துன்புறுத்திய ஆசிரியர்: சம்பவத்தை மறைக்க முயற்சித்த நிர்வாகம் |
இணக்கமாக முடிக்க பாடசாலை முயற்சி
மாணவியின் குடும்பத்துக்கு பண உதவியை வழங்கி இணக்கமாக முடிக்க பாடசாலை நிர்வாகம் முயற்சித்துள்ளது.
இந்த நிலையிலேயே மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் ஆசிரியை நேற்று மாலை
மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
எனினும் ஆசிரியையை எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
