யாழில் பாடசாலை மாணவி துன்புறுத்தல்! கைது செய்யப்பட்ட ஆசிரியைக்கு பிணை
யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலையொன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவரை பிணையில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாடசாலை மாணவி
குறித்த பாடசாலையில் கல்வி கற்று வரும் 7 வயது மாணவியை அடித்து துன்புறுத்தியமை தொடர்பிலேயே ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி கடந்த 10ஆம் திகதி அடித்துத் துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகிய மாணவிக்கு உளநல மருத்துவ வல்லுநரினால் உளநல சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
7 வயது மாணவியை அடித்து துன்புறுத்திய ஆசிரியர்: சம்பவத்தை மறைக்க முயற்சித்த நிர்வாகம் |
இணக்கமாக முடிக்க பாடசாலை முயற்சி
மாணவியின் குடும்பத்துக்கு பண உதவியை வழங்கி இணக்கமாக முடிக்க பாடசாலை நிர்வாகம் முயற்சித்துள்ளது.

இந்த நிலையிலேயே மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் ஆசிரியை நேற்று மாலை
மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
எனினும் ஆசிரியையை எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 12 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan