7 வயது மாணவியை அடித்து துன்புறுத்திய ஆசிரியர்: சம்பவத்தை மறைக்க முயற்சித்த நிர்வாகம்
யாழ்ப்பாண பிரபல பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவியை அடித்து துன்புறுத்தியமை தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு எதிராக விசாரணைகளை சிறுவர் பாதுகாப்பு பிரிவு முன்னெடுத்துள்ளது.
கடந்த 10ஆம் திகதி மாணவி அடித்துத் துன்புறுத்தப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
சிகிச்சை

கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகிய மாணவிக்கு உளநல மருத்துவ வல்லுநரினால் உளநல சிகிச்சை வழங்கப்பட்டது என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவியின் குடும்பத்துக்கு பண உதவியை வழங்கி இணக்கமாக முடிக்க பாடசாலை நிர்வாகம் முயற்சித்துள்ளது.
சிறுவர் பாதுகாப்பு

இந்நிலையில் சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு
உத்தியோகத்தர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri