பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை வழங்கும் சீனா:அமைச்சர் பந்துல குணவர்தன
2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களின் சீருடை தேவையில் ஒரு பகுதியை வழங்க சீனா இணங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்கிய சீனா
அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய சீனா இதற்கு இணங்கியது. பாடசாலை சீருடைகளுக்கு தேவையான மீதமுள்ள துணிகள் தேசிய விநியோகஸ்தர்களிடம் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
வருட இறுதிக்குள் மாணவர்களுக்கு சீருடைகள்
2022 ஆம் ஆண்டு முடிவடையும் முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களின் சீருடைகள் தொடர்பான யோசனையை கல்வியமைச்சர், அமைச்சரவையின் முன்வைத்திருந்தார்.




