கொழும்பில் பிரபல பாடசாலையொன்றின் உதவி அதிபர் செய்த மோசமான செயல்
கொழும்பில் பிரபல பாடசாலை ஒன்றின் உதவி அதிபர் மது போதையில் பாடசாலைக்கு வருகை தந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக காணொளியொன்று வெளியாகியுள்ளது.
மது போதையில் பாடசாலைக்கு வருகை தந்த ஆசிரியர் தனது கடமைகளை சரிவர நிறைவேற்றியுள்ளார். எனினும் திடீரென அவர் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு செல்வதற்காக உந்துருளியில் ஏறியுள்ளார்.

அதிபரின் செயலை கண்டித்து பெற்றோர்கள் முரண்பாடு
இதன்போது குறித்த உதவி ஆசிரியர் உந்துருளியை இயக்க முடியாது தடுமாறிய நிலையில் கட்டுப்பாட்டினை இழந்து திடீரென கீழே விழுந்துள்ளார்.
இந்நிலையில், கீழே விழுந்த உதவி அதிபரை , பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தூக்கும் வேளையிலேயே அவர் மது போதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.
அதேநேரம் பாடசாலையில் பெற்றோர்களுக்காக மாதாந்த கூட்டம் நடைபெறவிருந்தமையினால் பெற்றோர்கள் சிலர் பாடசாலைக்கு வருகை தந்திருந்த நிலையில்,உதவி அதிபரின் செயலை கண்டித்து பெற்றோர்கள் அதிபருடன் முரண்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 7 நிமிடங்கள் முன்
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam