கொழும்பில் பிரபல பாடசாலையொன்றின் உதவி அதிபர் செய்த மோசமான செயல்
கொழும்பில் பிரபல பாடசாலை ஒன்றின் உதவி அதிபர் மது போதையில் பாடசாலைக்கு வருகை தந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக காணொளியொன்று வெளியாகியுள்ளது.
மது போதையில் பாடசாலைக்கு வருகை தந்த ஆசிரியர் தனது கடமைகளை சரிவர நிறைவேற்றியுள்ளார். எனினும் திடீரென அவர் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு செல்வதற்காக உந்துருளியில் ஏறியுள்ளார்.

அதிபரின் செயலை கண்டித்து பெற்றோர்கள் முரண்பாடு
இதன்போது குறித்த உதவி ஆசிரியர் உந்துருளியை இயக்க முடியாது தடுமாறிய நிலையில் கட்டுப்பாட்டினை இழந்து திடீரென கீழே விழுந்துள்ளார்.
இந்நிலையில், கீழே விழுந்த உதவி அதிபரை , பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தூக்கும் வேளையிலேயே அவர் மது போதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.
அதேநேரம் பாடசாலையில் பெற்றோர்களுக்காக மாதாந்த கூட்டம் நடைபெறவிருந்தமையினால் பெற்றோர்கள் சிலர் பாடசாலைக்கு வருகை தந்திருந்த நிலையில்,உதவி அதிபரின் செயலை கண்டித்து பெற்றோர்கள் அதிபருடன் முரண்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan