முல்லைத்தீவில் பாடசாலைக்கு போதைப்பொருளுடன் சென்ற மாணவனால் சர்ச்சை
முல்லைத்தீவில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவரிடம் கஞ்சா பொதி காணப்பட்டமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை (25.07.2024) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
முல்லைத்தீவில் அமைந்துள்ள பாடசாலைக்கு தரம் 8 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் தனது வீட்டில் இருந்து வழமைப்போல சென்றுள்ளார்.
இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் அவர் வைத்திருந்த சிறு பொதி ஒன்றினை சக மாணவர்கள் பாடசாலையில் வைத்து அவதானித்துள்ளனர்.
அவதானித்த சக நண்பர்கள்
இதன்போது சக மாணவர்கள் இது தொடர்பில் பாடசாலை அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக குறித்த மாணவனிடம் விசாரணை மேற்கொண்ட பாடசாலை அதிபர், மாணவன் வைத்திருந்த பொதிக்குள் கஞ்சா போதைப்பொருள் இருப்பதினை அவதானித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மாணவனை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் தகவலறிந்த பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam