முல்லைத்தீவில் பாடசாலைக்கு போதைப்பொருளுடன் சென்ற மாணவனால் சர்ச்சை
முல்லைத்தீவில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவரிடம் கஞ்சா பொதி காணப்பட்டமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை (25.07.2024) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
முல்லைத்தீவில் அமைந்துள்ள பாடசாலைக்கு தரம் 8 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் தனது வீட்டில் இருந்து வழமைப்போல சென்றுள்ளார்.
இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் அவர் வைத்திருந்த சிறு பொதி ஒன்றினை சக மாணவர்கள் பாடசாலையில் வைத்து அவதானித்துள்ளனர்.
அவதானித்த சக நண்பர்கள்
இதன்போது சக மாணவர்கள் இது தொடர்பில் பாடசாலை அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக குறித்த மாணவனிடம் விசாரணை மேற்கொண்ட பாடசாலை அதிபர், மாணவன் வைத்திருந்த பொதிக்குள் கஞ்சா போதைப்பொருள் இருப்பதினை அவதானித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மாணவனை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் தகவலறிந்த பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
