விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவன்
ஹொரணை நோக்கிச் சென்ற பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை - ஹொரண வீதியில் கொத்தலாவல சந்திக்கு அருகில் உள்ள துணை வீதியிலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிள், ஹொரணை நோக்கிச் சென்ற பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பண்டாரகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
பாடசாலை மாணவன்
உயிரிழந்தவர் பண்டாரகம, யட்டியான பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஹொரணை மருத்துவமனை பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam