தந்தையை அழைத்து வரச் சொன்னதால் உயிரை மாய்த்த பாடசாலை மாணவி
கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுருலுனிகாவெவ ஜனசிரிகம பிரதேசத்தில் உள்ள வீட்டில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
ஹுருலுனிகாவெவ, கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உள்ள அனுர மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த பாடசாலை மாணவி நேற்று முன்தினம் தனது தந்தையின் கைத்தொலைபேசியை பாடசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
இதையடுத்து பாடசாலை அதிபர் கைத்தொலைபேசியை தன்னிடம் வைத்துக் கொண்டதுடன், மறுநாள் தந்தையுடன் பாடசாலைக்கு வருமாறு பாடசாலை அதிபர் கூறியுள்ளார்.
இதனால் மனவேதனையடைந்த மாணவி தனது வீட்டில் இருந்த விஷம் குடித்து உயிரை மாய்த்துள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமி உடனடியாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
