குருநாகல் பகுதியில்17 வயது பாடசாலை மாணவி விபத்தில் சிக்கி பலி
குருநாகல் - உஹுமிய, டி.எஸ். சேனநாயக்க கல்லூரிக்கு முன்பாக உள்ள பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் வாகன விபத்தில் சிக்கி இன்று (20.05.2023) உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் டி.எஸ். சேனநாயக்கா பாடசாலையில் 11ம் ஆண்டில் கல்வி பயிலும் அமோத்யா சித்துமினி ராஜகுரு என்ற 17 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரத்மலே உயன, உஹுமிய பிதுருவெல்லவில் வசிக்கும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையாவார்.

விபத்திற்கான காரணம்
மாணவி தனியார் வகுப்பில் கலந்துகொள்வதற்காக குருநாகல் செல்வதற்காக பேருந்துக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
வீதியில் பயணித்த ஜீப் வண்டியை சாரதி கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மாணவி மீது மோதி தொலைபேசி கம்பத்தில் மோதி நின்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சாரதியின் நித்திரை கலக்கமே விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த விபத்து தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பிலியந்தலை கோனாமடித்த பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri