நாட்டில் பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து அரசாங்கத்திற்கு முக்கிய வலியுறுத்தல்
நாட்டில் பாடசாலைகளை மீள திறப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
எதிர்வரும் 7ஆம் திகதி பாடசாலைகள் மீளத் திறக்கப்படவுள்ளன.
எனினும், தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சாரத்தடை காரணமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
எனவே இதன்காரணமாக மாணவர்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் அரசாங்கம் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.