கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி படுகாயம்! இருவர் கைது (PHOTO)
கிளிநொச்சி ஏ 35 வீதியின் பரந்தன், முரசுமோட்டை பகுதியில் இன்று இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான பேருந்தில் பாடசாலை மாணவியொருவர் ஏற முற்பட்ட வேளையில் விபத்திற்குள்ளாகியுள்ளார்.
இதன்போது குறித்த விபத்தினை ஏற்படுத்திய பேருந்தினையும் அதன் சாரதியினையும் தருமபுரம் பொலிஸார் விடுவித்துள்ளனர்.
இதன் காரணமாக காயமடைந்த சிறுமியின் சகோதரர் உட்பட இருவர் பேருந்தை வழிமறித்து தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவர் கைது
சம்பவத்தில் காயமடைந்த மாணவி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்து பேருந்தினை கொண்டு சென்றதால் ஆத்திரமடைந்த மாணவியின் சகோதரர் உட்பட இருவர் விபத்துடன் தொடர்புடைய பேருந்தை வழிமறித்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு சென்ற தருமபுரம் பொலிஸார் விபத்தினை ஏற்படுத்திய பேருந்தினையும் விபத்தை ஏற்படுத்திய சாரதியையும் உடனடியாக விடுவித்துள்ளதுடன், மாறாக விபத்தை மூடி மறைக்கும் விதத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் உள்ளிட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
