கோட்டாபய வழங்கிய அறிவுறுத்தல் - இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்
பாடசாலை மாணவ மாணவியருக்கு எதிர்வரும் 21ம் திகதி முதல் கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவ மாணவியருக்கு தடுப்பூசி ஏற்றுமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ(Gotabhaya Rajapaksa) அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த பாடசாலைகளில் மாணவ மாணவியருக்கு தடுப்பூசி ஏற்றப்படும் என இராணுவத் தளபதி இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்று குறைவடைந்தாலும் அதன் ஆபத்து இன்னமும் நீங்கவில்லை என்றும் பொது மக்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடர்ந்தம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.