பேஸ்புக் களியாட்டம்.. அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 26 பேர்
தெல்தெனிய பொலிஸார், பேஸ்புக் விருந்து ஒன்றை சோதனையிட்டதில், போதைப்பொருளுடன் 22 ஆண்களும் நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
தெல்தெனிய பொலிஸ் பிரிவில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் இந்த பேஸ்புக் விருந்து நடைபெற்றுள்ளது.
இந்நிலையில். இன்று (13) அதிகாலை குறித்த ஹோட்டலில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருட்கள்
சந்தேக நபர்கள் 4134 மில்லிகிராம் ஐஸ், 1875 மில்லிகிராம் ஹாஷ், 2769 மில்லிகிராம் குஷ், 390 மில்லிகிராம் கொக்கைன், 804 மில்லிகிராம் காளான், 13 மாத்திரைகள் மற்றும் 12 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த சந்தேகநபர்கள் கண்டி, முல்லேரியா, ஹட்டன், பிலாகல, அதுருகிரிய, கொட்டகெதர, ஹோமாகம, தொம்பே, எம்பிலிப்பிட்டிய, திருகோணமலை மற்றும் ஜா-எல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18 முதல் 31 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சந்தேக நபர்கள் இன்று தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதுடன் சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 13 மணி நேரம் முன்
உலகமே எதிர்பார்த்த ஈரானின் புதிய உச்ச தலைவரின் முதல் அறிக்கை! தன்னை முன்னிலைப்படுத்த தவறிய மொஜ்தபா கமேனி
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri