கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
2024ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பேறுபேறுகள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் தகுதி பெற்ற மாணவர்களுக்கும் உரிய அதிபர்களுக்கும் கல்வியமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த திருத்தம் செய்யப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு தற்போது சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீளத் திருத்தம்
இதேவேளை பாடசாலை அதிபர்கள் 2025.03.25 ஆம் திகதிக்கு முன்னர் நிகழ்நிலை முறையில் விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைகளின் அதிபர்களுக்கு உரிய விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டுள்ளதுடன், அவ் விண்ணப்பப் படிவத்தை தரம் 05 இல் கல்வி கற்ற பாடசாலை அதிபரிடமிருந்து பெற்று பெற்றோர் அதனை முறையாக பூரணப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை அதிபரிடம் மீண்டும் கையளிக்க வேண்டும் எனவும் பாடசாலை அதிபர்கள் உரிய திகதிக்கு முன்னர் நிகழ்நிலை முறையில் விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri
