யாழ்.வைத்தியசாலையில் நடைபெற்ற மில்லியன் கணக்கான மோசடி! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அர்ச்சுனா
மில்லியன் கணக்கான பணம் யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சுமார் 30 மில்லியன் பெறுமதியான பணம் வைத்திய அதிகாரிக்கு தெரியாமல், பெண் வைத்தியரொருவரால் பாவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் ஊழல் நடவடிக்கைகள் தொடர்பில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ''வைத்திய அதிகாரிக்கு தெரியாமல், வைத்தியர் கிருஷாந்தி 30 மில்லியன் பெறுமதியான பணத்தை தனது சொந்த பணமாக எடுத்து கென்சர் வைத்தியசாலைக்கு பாவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் வைத்தியசாலைகள் தனிநபர்களின் விருப்பத்திற்கமைய நிர்வகிக்கபடுகின்றன.
இவ்வாறு வைத்தியசாலைகளில் நடக்கும் ஊழல்கள் குறித்து நான் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு சென்று உரையாடிவிட்டு வருகிறேன்.''என கூறியுள்ளார்.
இது குறித்து அர்ச்சுனா தெரிவித்த கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்...,
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan