புதிய கோவிட் கட்டுப்பாடுகள் தொடர்பில் கனடாவின் முக்கிய மாகாணத்தின் அறிவிப்பு
கனடாவின் முக்கிய மாகாணமான Saskatchewanஇல் புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை Saskatchewan மாகாணத்தின் பிரீமியரான Scott Moe அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பெடரல் அரசின் கூற்றுப்படி கடந்த ஏழு நாட்களில் கனடாவில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது Saskatchewan மாகாணத்திலேயே அதிகம் என தெரியவருகிறது.
அத்துடன், கடந்த ஏழு நாட்களில் கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கையும் இந்த மாகாணத்திலேயே அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில் Saskatchewan மாகாணத்தில் கோவிட் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என மாகாண மருத்துவர்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையிலேயே Saskatchewan மாகாண பிரீமியர் Scott Moe குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெரும்பான்மையோர் கோவிட் தடுப்பூசி பெற்றுள்ள நிலையில், இப்போதைக்கு இருக்கும் கட்டுப்பாடுகளே தொடர்ந்து அமுலில் இருக்கும் புதிதாக கட்டுப்பாடுகள் எதுவும் இப்போதைக்கு விதிக்கப்படாது என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 13 மணி நேரம் முன்
உலகமே எதிர்பார்த்த ஈரானின் புதிய உச்ச தலைவரின் முதல் அறிக்கை! தன்னை முன்னிலைப்படுத்த தவறிய மொஜ்தபா கமேனி
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்
இதற்காகதான் பாகிஸ்தானியரை எடுத்தோம்: அவரைப் பெற்றதில் மகிழ்ச்சி - சன்ரைசர்ஸின் வெட்டோரி News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam