புதிய கோவிட் கட்டுப்பாடுகள் தொடர்பில் கனடாவின் முக்கிய மாகாணத்தின் அறிவிப்பு
கனடாவின் முக்கிய மாகாணமான Saskatchewanஇல் புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை Saskatchewan மாகாணத்தின் பிரீமியரான Scott Moe அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பெடரல் அரசின் கூற்றுப்படி கடந்த ஏழு நாட்களில் கனடாவில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது Saskatchewan மாகாணத்திலேயே அதிகம் என தெரியவருகிறது.
அத்துடன், கடந்த ஏழு நாட்களில் கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கையும் இந்த மாகாணத்திலேயே அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில் Saskatchewan மாகாணத்தில் கோவிட் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என மாகாண மருத்துவர்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையிலேயே Saskatchewan மாகாண பிரீமியர் Scott Moe குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெரும்பான்மையோர் கோவிட் தடுப்பூசி பெற்றுள்ள நிலையில், இப்போதைக்கு இருக்கும் கட்டுப்பாடுகளே தொடர்ந்து அமுலில் இருக்கும் புதிதாக கட்டுப்பாடுகள் எதுவும் இப்போதைக்கு விதிக்கப்படாது என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri