சஜித் பிரேமதாசவை கடுமையாக சாடிய சரத் பொன்சேகா
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(Sarath Fonseka), கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவை கடுமையாக சாடியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் ஆற்றிய உரையில் இவ்வாறு கடுமையாக சாடியுள்ளார்.
''நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கு தனக்கு நேரம் ஒதுக்கப்படுவதில்லை.
சஜித்திற்கு ஆதரவு
தாம் உரையாற்றுவதற்கு நேரம் கோட்ட போது எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் சஜித்திற்கு எதிர்வரும் தேர்தலில் ஆதரவளிப்பீர்களா என கேள்வி எழுப்பினார்.
எனினும் ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான, தமக்கு நேரத்தை ஒதுக்கித் தந்தனர்.

மூன்று அமர்வுகளில் தாம் ஒரு நாள் மட்டுமே பேசினேன். சிலர் நாள் தோறும் அரை மணித்தியாலத்திற்கு மேல் பேசுகின்றனர்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் தாம் களவாடியதில்லை.
கசீனோ சூதாட்ட உரிமையாளர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களை விநியோகம் செய்ததில்லை.
பொருட்களை விநியோகம் செய்து இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.
அரசியல்வாதிகள் வழங்கும் நன்கொடைகளை ஏற்றுக்கொள்ளுமாறும், வாக்குகளை அவர்களுக்கு அளிக்க வேண்டாம் எனவும் தாம் மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
13ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக சஜித் பிரேமதாச வழங்கிய உறுதிமொழி ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.” என்றார். .
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் வில்லன் ராவணன் ஆதிமுத்துவாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் இவர்தான்.. புகைப்படங்கள் இதோ Cineulagam