சரத் பொன்சேகாவை உடன் கைது செய்ய வேண்டும் - ஜனாதிபதியிடம் கோரிக்கை
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் சமாதானம் மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகை போன்ற நாட்டின் நிர்வாக கேந்திர மையங்களை போராட்டகாரர்கள் கைப்பற்றியமைக்கு பொறுப்புக் கூற வேண்டிய பிரதான நபர் வேறு யாருமல்ல, அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா என விமலவீர திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எவரையும் கைது செய்வதற்கு முன்னர் சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைவதற்கு முன்னர் அவர்களை சுட வேண்டாம் என சரத் பொன்சேகா இராணுவத்திற்கு அறிவித்திருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
சரத் பொன்சேகாவின் தலையீடு நாட்டுக்கு இவ்வளவு அழிவை ஏற்படுத்தியதாகவும் அதனால்தான் பொன்சேகா உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri