சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள அசௌகரியம் - நெருக்கடியில் மக்கள்
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சூழவுள்ள பகுதியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக பியகம பிரதேச சபையின் தலைவர் ஆனந்த கணேபொல தெரிவித்துள்ளார்.
கடும் துர்நாற்றம்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த சில நாட்களாக கடும் துர்நாற்றம் வீசுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.
விசேட அறிக்கை

இது தொடர்பில் பியகம உள்ளூராட்சி சபையின் தலைவர் ஆனந்த கணேபொலவிடம் வினவிய போது இது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு தெரியப்படுத்தியதையடுத்து இது தொடர்பான அறிக்கையை கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரம்மாண்டமான விஷுவல்ஸ்.. சிவராத்திரி அன்று வெளிவந்த நாகபந்தம் படத்தின் மிரட்டலான டிரைலர்.. Cineulagam
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயில், அதிர்ச்சியில் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ Cineulagam
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam