சந்நிதியான் ஆச்சிரமம் மதங்களைக் கடந்து உதவிகளை வழங்குகிறது: மோகன் சுவாமி தெரிவிப்பு
செல்வச் சந்நிதியான் மதங்களைக் கடந்து இலங்கையின் பல பாகங்களிலும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவிகளை வழங்கி வருவதாக ஆச்சிரம முதல்வர் மோகன் சுவாமிகள் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து அன்னதான பணியில் இணைந்து கொண்ட நான் எனது குருநாதரின் வழிநடத்தலில் சந்நிதியான ஆச்சிரமத்தை வழிநடத்தி வருகிறேன்.
உணவு வழங்கள்
இங்கு நான் முதலாளி அல்ல. முருகன் தான் முதலாளி அள்ளித் தருகிறான் ஏழைகளுக்கு இல்லை என்று வருபவர்களுக்கு அவன் அருளால் அள்ளி வழங்கி வருகிறோம்.
யுத்த காலத்தில் துவிச் சக்கர வண்டி மூலம் நெல்லு பெற்று உரலில் போட்டு கோது நீக்கி முருகனை நாடிவரும் அடியவர்களுக்கு உணவு சமைத்து வழங்கினோம்.
நாம் யாரிடமும் அன்னதானத்துக்கு பணம் தாருங்கள் அல்லது எங்கள் ஆசிரமத்துக்கு உதவி செய்யுங்கள் என கேட்டது கிடையாது. ஆனாலும் எமது ஆரம்ப காலத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய நான்கு அல்லது ஐந்து பேரிடம் உதவிகளைப் பெற்று ஆசிரமத்தை நடத்தி வந்தோம்.
இன்று மரம் பழுத்து பழமாக உள்ள நிலையில் பலரும் உதவி செய்கிறார்கள். ஆனாலும்
எம்மை முன்பு வளர்த்து விட்டவர்களை நான் ஆத்திரமத்தில் இருப்பவர்களுக்கு
கூறியிருக்கிறேன் அவர்களை எக்காலத்திலும் நான் நன்றி உடையவர்களாக இருக்க
வேண்டும் என்று.
முருகனின் ஆச்சிரமத்தில் தினமும் 60க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு மூன்று நேர உணவு தேநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது வாரத்தில் ஏழு நாட்களும் முருகனை நாடிவரும் அடியவர்களுக்கு இல்லை என்று கூறாமல் உணவு வழங்கி வருகிறோம்." என்றார்.