நல்லூர் கந்தனை தங்கத்தால் அலங்கரித்தவர் கோவிட்டால் மரணம்
நல்லூர் கந்தனை தங்கத்தினால் அலங்காரம் செய்தவர்களில் ஒருவரான இரத்தினசபாபதி சிவசண்முகநாதன் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் இரண்டு வார காலம் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.அவரின் உடலம் அன்றையதினமே தகனம் செய்யப்பட்டுள்ளது.
சிவசண்முகநாதன் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் ஆவார். சமகாலத்தில் தென்னிந்தியாவில் சினிமா தொழில் துறை சார்ந்த சில நிறுவனங்களுக்கு உரிமையாளராக செயற்பட்டுள்ளார்.
நல்லூர் கந்தனின் உற்சவமூர்த்திகளை அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் நல்லூர் கந்தனின் ஆறுமுகசுவாமி பகுதியை பொன்னால் செய்த வேலைப்பாடுகளை இந்தியாவிலும் நல்லூரிலும் முன்னின்று வழிநடத்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam

போர் தொழில் இயக்குநருடன் கைகோர்க்கும் தனுஷ்.. ஹீரோயின் மமிதா பைஜூ! ஷூட்டிங் எப்போது தெரியுமா Cineulagam
