முக்கிய துறைகளில் இந்தியாவின் ஆதரவை எதிர்ப்பார்க்கும் ஜனாதிபதி
இலங்கையில் (Sri Lanka) மின்சக்தி மற்றும் வலுசக்தித் துறையின் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake ) இந்திய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (01) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இந்த விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
மின்சாரம், எரிசக்தி துறை மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் செயன்முறையில் இந்தியாவின் நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் ஜனாதிபதி பேச்சுவார்ததை நடாத்தியுள்ளார்.
கடற்றொழில் பிரச்சினைகள்
இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களின் தேவைகளுக்கு மதிப்பளித்து, ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் நீண்ட கால தீர்வின் முக்கியத்துவத்தை இரண்டு தரப்பினரும் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், வடக்குக் கடலில் நடந்து வரும் கடற்றொழில் பிரச்சினைகளையும் அவர்கள் ஆராய்ந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
