விபத்தில் பலியான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஜீப் வண்டி சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், பாரவூர்தியின் சாரதியை பிணையில் விடுவிக்கவும் வெலிசர நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.

சென்னையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பவதாரணியின் உடல் : ஒன்று திரளும் திரைப் பிரபலங்கள்
இறுதிக்கிரியைகள்
கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கொள்கலன் பாரவூர்தியை முந்திச் செல்ல முற்பட்ட போது, ஜீப் வண்டி பாரவூர்தியின் பின்புறம் மோதி பின்னர் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியிருந்தது.
இந்த விபத்தில் சிக்குண்டு உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் உடல் புத்தளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதேவேளை, சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்ட சனத் நிஷாந்தவின் உடல் : வீதியின் இரு மருங்கிலும் காத்திருந்த மக்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
