இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ள சனத் ஜயசூரிய
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்தமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய விசேட நன்றியை தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் ஜயசூரிய இந்த நன்றியை தெரிவித்துள்ளார். இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதை ஊக்குவிப்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு இந்த நன்றியை தெரிவித்துள்ள ஜயசூரிய, எதிர்காலத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அதில் கூறியுள்ளார்.

சனத் ஜயசூரிய இலங்கையின் சுற்றுலாத்துறை விளம்பர தூதுவராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்கான திட்டங்களிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்திய சுற்றுலா பயணிகளுக்காக இராமாயண பாதை சுற்றுலா திட்டத்தை ஊக்குவிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக சனத் ஜயசூரிய கூறியிருந்தார்.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri