இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ள சனத் ஜயசூரிய
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்தமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய விசேட நன்றியை தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் ஜயசூரிய இந்த நன்றியை தெரிவித்துள்ளார். இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதை ஊக்குவிப்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு இந்த நன்றியை தெரிவித்துள்ள ஜயசூரிய, எதிர்காலத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அதில் கூறியுள்ளார்.
சனத் ஜயசூரிய இலங்கையின் சுற்றுலாத்துறை விளம்பர தூதுவராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்கான திட்டங்களிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்திய சுற்றுலா பயணிகளுக்காக இராமாயண பாதை சுற்றுலா திட்டத்தை ஊக்குவிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக சனத் ஜயசூரிய கூறியிருந்தார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

இளவரசர் பிலிப்புடைய சவப்பெட்டியை சுமந்த இராணுவ அதிகாரிக்கு நிகழ்ந்த பரிதாபம்: ஒரு துயரச் செய்தி News Lankasri

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan
