சனத் ஜயசூரியவின் பதவிக் காலம் நீடிப்பு
இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் இன்று(29) அறிவித்துள்ளது.
2024 ஜூலை 07ஆம் திகதியன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஆடவர் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூர்யா தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.
இடைக்கால நியமனம்
இந்தநிலையில், ஜெயசூரிய, இந்தியாவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு இடைக்கால தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார்.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற 20க்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளில், இலங்கையின் மோசமான செயல்பாட்டுக்கு பிறகு தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் மற்றும் ஆலோசகர் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் பதவி விலகியதைத் செய்ததைத் தொடர்ந்து இந்த இடைக்கால நியமனம் வழங்கப்பட்டுள்ளது.





மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri
