குறுக்கு வழியில் தீர்வை பெற முயற்சிக்கும் தமிழ் தரப்பு: பந்துல குற்றச்சாட்டு
தாங்கள் விரும்பும் தீர்வை ஜனாதிபதியிடம் குறுக்குவழியில் தட்டிப்பறிக்கலாம் என்று சம்பந்தன் தலைமையிலான குழுவினர் முயல்கின்றனர் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், இந்தியாவை வைத்து இலங்கையை மிரட்டலாம் எனச் சம்பந்தன் குழுவினர் எண்ணுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பிரச்சினைக்கான தீர்வு
மேலும், "இலங்கை இறைமையுள்ள நாடு. எமக்கென்று ஒரு ஜனாதிபதி உள்ளார்.
பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான நாடாளுமன்றமே முடிவு செய்யும்" என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |