கிளிநொச்சி பொலிஸ் பொறுப்பதிகாரி தொடர்பில் சாமர எம்.பியின் பரபரப்பு தகவல்
கிளிநொச்சி பொலிஸ் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் மொஹமட் நஜீப்புக்கு எவ்வித தகுதியும் இல்லை என நாடாளுமன்றத்தில் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்ததுள்ளார்.
ஒதுக்கீட்டு சட்ட மூலத்தின் பாதுகாப்பு அமைச்சு குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடரந்து பேசிய அவர்,
காணியை பார்த்துக் கொண்டமை
பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஒருவரின் திருகோணமலை காணியை பார்த்துக் கொண்டதற்காகவே இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இவர் எந்த பொலிஸ் நிலையத்திலும் பொறுப்பதிகாரியாக இருக்கவில்லை. அத்தோடு திருகோணமலையில் பொறுப்பதிகாரியாக இருந்த சமயத்தில் எவ்வித தேடுதல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதில்லை. எப்படி இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டது.
20,000 பேர் ஓய்வு
பொலிஸ் திணைக்களத்தில் 88-87-89-90-92 காலத்தில் சேர்ந்தவர்கள் 2026 ஆம் ஆண்டாகும் போது ஓய்வு பெறவிருக்கின்றனர். இவர்கள் 20,000 பேர் கட்டாயம் ஒய்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவுள்ளனர்.
ஏனென்றால் 55 வயதுக்கு மேல் இன்றைய நிலையில் அதாவது 60 வயது வரை சேலை செய்ய முடியாத நிலைமை பொலிஸ் திணைக்களத்தில் உருவாகியுள்ளது. அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாட்டிலுள்ள பொலிஸ் பயிற்சி கல்லுரிகளில் இது வரை 6000 பேரே பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களை வைத்துக் கொண்டு 20,000 பேரின் இழப்பை ஈடு செய்ய முடியாது என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam
இருக்கும் பிரச்சனையில் பழைய வில்லன் என்ட்ரி, நந்தினி, ரேணுகா எப்படி சமாளிக்க போகிறார்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam