இலங்கை அரசியல்வாதிகளின் முகங்களில் கரியை பூசிய அமெரிக்காவின் உயர் அதிகாரி
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் உயர்நிலை அதிகாரியான சமந்தா பவர் வயல் நிலங்களை சென்று பார்வையிட்டதுடன், அங்கு விவசாயிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் ஜா-எலவில் உள்ள வயல் நிலங்களில் விவசாயிகளை சந்தித்து விசேட கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் உயர் அதிகாரி

தெரிவு செய்யப்பட்ட விவசாயிகள் குழுவுடனான கலந்துரையாடலின் போது விவசாயப் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்திய சமந்தா பவார், நாட்டில் வழங்கப்படவுள்ள கடன் சலுகைகளுக்கு மேலதிகமாக உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளார்.
உர நெருக்கடி, விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இரசாயன உரங்களை நிறுத்துதல் ஆகியவை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
தென்னிலங்கை அரசியல்வாதிகள்

இந்த நிகழ்வில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று கலந்துகொண்டது.
அமெரிக்கா உயர் அதிகாரி ஒருவர் வயலுக்குள் இறங்கிய புகைப்படங்கள் சர்வதேச ரீதியாக அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள். குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், அமெரி்காவின் உயர் அதிகாரி ஒருவரின் இவ்வாறான செயற்பாடு பலருக்கு முன்மாதிரியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan