22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது! சுட்டிக்காட்டும் சமன் ரத்னப்பிரிய
முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசாங்கம் கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்று (27.08.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு விசாரணை
அவர் மேலும் தெரிவிக்கையில், ஊழல்வாதிகளுக்கு எதிரான வழக்குகள் எந்த நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுகின்றன என்பது கூட இந்த அரசாங்கத்திற்கு தெரியவில்லை. இவ்வாறான வழக்குகள் அனைத்தும் நீதவான் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களிலேயே நிலுவையில் உள்ளன.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் யோசனை ஆரம்பத்தில் உயர் நீதிமன்றத்துக்கே கொண்டுவரப்பட்டது. அதற்கு எழுந்த கடுமையான எதிர்ப்புகள் காரணமாகவே, பின்னர் அது மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கும் அதன் கீழ் உள்ள நீதிமன்றங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. நாட்டில் தற்போது சுமார் 11 இலட்சம் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.
நிலுவையில் உள்ள வழக்குகள்
இதில் 10,000 வரையிலான வழக்குகள் மட்டுமே உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ளன. எஞ்சிய 10 இலட்சத்து 90 ஆயிரம் வழக்குகள் அனைத்தும் கீழ் நீதிமன்றங்களிலேயே நிலுவையில் உள்ளன.

கீழ் நீதிமன்றங்களிலேயே அதிகளவிலான நீதிபதி வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும், கடந்த எட்டு மாதங்களாக அரசு அந்த வெற்றிடங்களை நிரப்பாமல் வைத்துள்ளது.
அதை முறைப்படி நிரப்பாமல், வெறும் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் மூலம் நீதிமன்றப் பிரச்சினைகளுக்கோ அல்லது மோசடிக்காரர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கோ எந்தவொரு தீர்வும் கிடைக்காது என்றார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri