சஜித் அணியில் இருந்து மூவர் அரசாங்கத்துடன் இணைவு
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து 12 பேர் அரசாங்கத்துடன் இணையப் போகின்றார்கள் என்ற தகவல் கடந்த மாதம் வெளிவந்திருந்த நிலையில், தற்போது மூவர் அரசாங்கத்துடன் இணையப் போகின்றார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் களுத்துறை, கண்டி, கேகாலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சுப் பதவிகளும், இராஜாங்க அமைச்சுப் பதவியும்
மூவரில் இருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளும், ஒருவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியும் வழங்கப்படவுள்ளது என்று மேலும் தெரிவிக்கின்றது.
இத்தகவலை ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து அரசாங்கத்துடன் இணையப் போகும் அரசியல்வாதி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.