உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கமுடியாது என ஜனாதிபதி கூறுவது தவறு: சாலிய பீரிஸ் எச்சரிக்கை

Sri Lanka Saliya Pieris Sri Lanka Presidential Election 2024
By Harrish Aug 07, 2024 07:04 AM GMT
Report

ஒரு நாட்டில் நிலைபேறான அபிவிருத்தியைக் கட்டியெழுப்பவேண்டுமெனில், அந்நாட்டில் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றுக்கு மதிப்பளிக்கப்படவேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கமுடியாது என ஜனாதிபதி கூறுவது எதிர்வருங்காலத்தில் ஆட்சிபீடம் ஏறவுள்ள ஆட்சியாளர்களுக்குத் தவறான முன்னுதாரணமாக அமையும் என எச்சரித்துள்ளார். 

இலங்கையின் தேர்தல் சூழ்நிலையில் ஊடகம் மற்றும் சட்டத்தின் வகிபாகம்' எனும் தலைப்பில் இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்துரை நிகழ்வு நேற்று(06) கொழும்பிலுள்ள சட்டத்தரணிகள் சங்கத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றுள்ளது. 

அந்நிகழ்வில் கலந்துகொண்டு விசேட உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

தொடர் வெற்றிகளை பெற்ற யூ சுசாகிக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்திய வீராங்கனை

தொடர் வெற்றிகளை பெற்ற யூ சுசாகிக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்திய வீராங்கனை


நாட்டின் ஜனநாயகம்

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

“அமெரிக்காவில் கடந்த 2016 ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தெரிவானதன் பின்னர் 'எவ்வாறு ஜனநாயகம் மரிக்கிறது?' என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூலில் உள்ள விடயங்கள் அமெரிக்காவுக்கு மாத்திரமன்றி, நம்மனைவருக்கும் பொருந்தக்கூடியவையாகும். 

பொதுவில் இராணுவ சதி மற்றும் புரட்சி போன்றவற்றின் விளைவாக ஜனநாயகம் மரிப்பதாகக் கூறப்படுகின்ற போதிலும், நவீன உலகத்தில் தேர்தல் ஊடாக ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்ட தலைவராலேயே ஜனநாயகத்தை வலுவிழக்கச்செய்யவும் முடியும். 

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கமுடியாது என ஜனாதிபதி கூறுவது தவறு: சாலிய பீரிஸ் எச்சரிக்கை | Saliya Peiris Alert Ranil Wickremesinghe

இவ்வாறானதொரு பின்னணியிலேயே இம்முறை நியாயமானதும், சுதந்திரமானதுமான தேர்தல் இடம்பெறுவதை உறுதிசெய்யவேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. ஏனெனில் 'அரகலய' போராட்டத்தின் பின்னர் நாட்டுமக்கள் தேர்தலொன்றில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் முதன்முறையாக வழங்கப்படுவதனால், இது மிகமுக்கியமான தேர்தலாகும். 

ஒரு நாட்டில் நிலைபேறான அபிவிருத்தியைக் கட்டியெழுப்பவேண்டுமெனில், அந்நாட்டில் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றுக்கு மதிப்பளிக்கப்படவேண்டும். 

குறிப்பாக பங்களாதேஷில் பிரதமராகப் பதவி வகித்த ஷெய்க் ஹஸினா ஜனநாயகக்கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு காணப்பட்டது. 

எனவே அவ்வாறான பின்னணியில் பொருளாதார வளர்ச்சி வேகம் எத்தகைய மட்டத்தில் காணப்பட்டாலும், மக்கள் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக நிச்சயமாகக் கிளர்ந்தெழுவர். 

அதேபோன்று எமது நாட்டில் தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றுவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பித்திருக்கிறது. இருப்பினும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கமுடியாது என ஜனாதிபதியும், பிரதமரும் கூறுகின்றனர். 

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கமுடியாது என ஜனாதிபதி கூறுவது தவறு: சாலிய பீரிஸ் எச்சரிக்கை | Saliya Peiris Alert Ranil Wickremesinghe

இவ்வாறு நாட்டின் நீதித்துறையைப் புறந்தள்ளுவது மிகப்பாரதூரமான விடயமாகும். இதனை நாம் ரணில் விக்ரமசிங்க, தினேஷ் குணவர்தன என நபர்களை அடிப்படையாகக்கொண்டு நோக்கவில்லை. 

மாறாக இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இடமளிப்பதானது, எதிர்வருங்காலங்களில் ஆட்சிபீடமேறும் ஜனாதிபதி நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளுவதாகக் கூறுவதற்கே வழிகோலும். 

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கமுடியாது என ஜனாதிபதி கூறுவது தவறு: சாலிய பீரிஸ் எச்சரிக்கை | Saliya Peiris Alert Ranil Wickremesinghe

ஆகவே நீதிமன்றத்தின் சுயாதீனத்துவமும் மேன்மையும் பாதுகாக்கப்படும் அதேவேளை, நாட்டின் ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் உறுதிசெய்யப்படவேண்டும். 

அத்துடன், இத்தகை நெருக்கடிநிலையில் ஊடகவியலாளர்கள் எவ்வித பக்கச்சார்புமின்றி சுயாதீனமாகவும், நேர்மையாகவும் தமது அறிக்கையிடல் பணிகளை முன்னெடுக்கவேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு

பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு

ஐரோப்பிய நாடொன்றிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள ஆபத்தான குற்றவாளிகள்

ஐரோப்பிய நாடொன்றிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள ஆபத்தான குற்றவாளிகள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு

20 Aug, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US