திருகோணமலையில் இந்தியாவிற்கு எதிராக வீதிக்கு இறங்கிய பொதுமக்கள்
திருகோணமலையின் வளங்களை பிற நாடுகளுக்கு விற்பதை உடனடியாக நிறுத்துமாறு கோரி மாவட்ட பிரஜைகள் சங்கத்தினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டடுள்ளது.
திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் இன்றையதினம் (18.01.2024) குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“ஊர் மக்களை விரட்டி அடித்து இந்தியாவிற்கு விற்க வேண்டாம், துறைமுகத்தையும், எண்ணெய் தாங்கிகளையும் இந்தியாவிற்கு வழங்க வேண்டாம்” என்ற பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், “அம்மா அப்பா இதைக் கேளுங்கள் அண்ணன் தம்பி இதைக் கேளுங்கள். எங்கள் நிலம் எங்கள் வளங்கள் காத்திட முன்வருங்கள், ஊரையே வெளியேற்றி பொருளாதார வலயம் செய்கிறார்களாம். ஊர் மக்களை விரட்டி அடித்து இந்தியாவுக்கு விற்கிறார்கள்” போன்ற கோஷங்களை எழுப்பியி தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




