யாழில் காலாவதியான பொருட்கள் விற்பனை: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 11 வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் மாதம் 20, 21ஆம் திகதிகளில் யாழ்.மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மாநகர சபைக்கு உட்பட்ட பலசரக்கு கடைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது வண்ணார்பண்ணை பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில் 10 பலசரக்குக் கடைகளில் காலாவதியான பொருட்கள் அப்பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
காலாவதியான பொருட்கள் மீட்பு

இதேவேளை நல்லூர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவிலும் ஓர் கடையில் காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேற்படி கடை உரிமையாளர்களுக்கு எதிராக நேற்று யாழ்.மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த வழக்கை விசாரித்த நீதிவான் கடை உரிமையாளர்கள் 11 பேருக்கும் மொத்தமாக ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிட்டுத் தீர்ப்பளித்துள்ளார்.
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan