திருகோணமலையில் மோசடியான முறையில் டீசல் விற்பனை
Police
Sri lanka
Trincomalee
By Independent Writer
திருகோணமலை - மட்டிக்களி பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்யப்படுவதாக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூதூர் பல்நோக்கு கூட்டுறவுக்சங்கத்தினால் கண்காணிக்கப்பட்டு வரும் இந்த பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் டீசலுடன் - மண்ணெண்ணெய் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் டீசலை பகுப்பாய்வு செய்வதற்காக
பெறப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக
பொலிஸார் தெரிவித்தனர்.




தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US