ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகும் சஜித்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டின் உன்னதமான சட்டத்தை நீதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத்தேர்தல்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமையின் ஊடாக ஜனாதிபதி மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படை உரிமைகளை மீறிய ஒர் வேட்பாளராகவே இம்முறை ரணில் தேர்தலில் போட்டியிடுகின்றார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியவர்களுக்கு தமது அரசாங்க ஆட்சியில் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்நோக்க நேரிடும் என சஜித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
