ஜனாதிபதியுடன் ஒத்துழைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை : சஜித் வெளிப்படை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் ஒத்துழைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தமது கட்சி நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெறுவதற்கான திறனில் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க உறுப்பினர்கள்
தேர்தல் பிரசாரம் ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி வேறு கட்சியில் இருந்தும் அரசாங்க உறுப்பினர்கள் வேறு கட்சியில் இருந்தும் நாட்டுக்கு செயற்படமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தலைமைத்துவத்திற்கு மிகவும் பொருத்தமான தெரிவாக, நாட்டின் அபிவிருத்திக்கான தெளிவான பார்வையுடன் கூடிய பலமான அணியொன்றை தமது அணி கொண்டிருப்பதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
